Wednesday, July 15, 2009

ஒபாமாவின் கவனத்தை ஈர்த்த பிரேசில் பெண்


இத்தாலி நாட்டில் ஜி-8 நாடுகள் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ,பிரான்ஸ் பிரதமர் சர்கோசி ஆகியோர் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர் .இந்த மாநாட்டில் ஜி-8 நாடுகளின் இளைஞ்ர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் அவர்கள் தலைவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது இதில் ஒபாமாவின் கவனத்தை கவர்ந்தவர் பிரேசில் நாட்டின் 17 வயது பெண் ஆவார்.மயோரா டவ்ரேஸ் என்ற அந்த பெண் திரும்பி சென்றபோது அவரது பின்புறத்தையே ஒபாமாவும், சர்கோசியும் பார்த்து கொண்டிருந்த காட்சியை பத்திரிகை மற்றும் தொலைகாட்சி நிருபர்கள் பதிவு செய்து ஒளிபரப்பிவிட்டார்கள் இதை பார்த்து மக்கள் மத்தியில் அந்த பெண்ணுக்கு தனி மரியாதையை.இதுதான் பின் யோகமோ ?

Thursday, May 14, 2009

வேட்பாளர்கள்

மத்திய சென்னை தொகுதி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் ஏன் தெரியுமா ?
அதில் இருந்த ஒரு வேட்பாளரின் பெயர்கள் ஆம்
1. யூனுஸ் கான்
இவன் 10 வருடங்களுக்கு முன்பு எங்க ஏரியாவில் விபச்சாரம் செய்யும் பிரோகர்
அது மட்டும் இல்லை இரவில் பெண்கள் அவன் இருக்கு இடத்தை கடந்து செல்ல முடியாது ,வழிபறி,கொலை ,கொள்ளை, எல்லா வித அயோகியதனங்கள் எல்லாம்
செய்தவன். அவன்னுக்கு பகுஜன் சமாஜ் கட்சியள் சீட் என்ன கொடும சார் இது.
இது மட்டுமா கோயம்புத்தூர் நடந்த திவிரவதி தாக்குதலில் இவனும் ஒரு முக்கிய குற்றாவாளி.
இது எப்படி ஏற்று கொள்ளவது ,அரசியல் சட்டம் இருகிறதா இல்லையா ?
அதிகாரிகளுக்கு தெரியுமா இல்லையா ? ????????

Thursday, May 7, 2009

தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

துவள வில்லை உதம் சிங், அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்

மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....

ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?

நல்ல நியாம்டா சாமி.............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......

ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.. இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''


ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே...... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்தியர்களுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................


மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்.....................

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை

மனிதனாக இருந்தால் போதும்.....

Tuesday, April 28, 2009

பெரியவரின் தேர்தல் நாடகம்

உள்ளகிலேயே மிக குறிகிய காலம் உண்ணாவிரதம் இருந்த முதல் முதல்வர் நம் பெரியவர் தான், ராஜபக்சேவிற்கே தெரியாமல் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவித்தவர் அல்லவா. என்ன தேர்தல் நாடகம !தமிழ் நாட்டையே மதிக்காத அமையார் இங்கு வந்து ஆங்கிலத்தில் என்ன சொல்லபோகிறார் ? ராஜீவ் காந்தியை கொன்றது பிரபாகரன் என்றே இருந்தாலும் அதற்கு இத்தனை உயிர்கள்ல, அமையார் தாய் உள்ளம் கொண்டவர்தான ? .நாள்தோறும் செத்துமடியும் மக்களின் உயிர் பற்றி கவலை இல்லை ஆனால் பெரியவர் காலை உணவை அருந்தாதற்கு பெயர் காலவரையற்ற உணவிரதம் அதை பார்த்த தொண்டர்கள் கலவரம், என்ன கொடும சார் இது. கடந்த 8 நாட்களாக தாயகத்தில் சில பெண்கள் உண்வு அருந்தாமல் இருபதிற்கு பெயர் என்ன வென்று பெரியவர் தான் சொல்ல வேண்டும். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Monday, April 27, 2009

துணை போகும் தேர்தல் ஆணையம்

எல்லா கட்சியினர் சொத்துகள் விவரம் வரும் மறு என்று பட்டியலிட்டு காண்பித்த தேர்தல் ஆணையம் ஏன் தி.மு.க, ஆ.தி.மு.க,மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சொத்துகள் விவரம் மட்டும் ஏன் காண்பிகவில்லை.மக்கள் விழ்த்து விடுவார்கள் என்று நினைத்ரிபார்கள், கவலை வேண்டாம்கரைவேடி கட்டிய தொண்டன் இருக்கும் வரை உங்கள் கரைகள் மறைக்க படும்.

Tuesday, April 21, 2009

மாந்திரிக உலகம்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசிப்பவர் சையத் இவரும், இவரது தம்பியும் சேர்ந்து பல மாந்திரிக வேலை தெரிந்தவர்கள் என்று சொல்கிறார்கள், திருவல்லிக்கேணி பெரிய மசுதியில் இவர்களை பற்றி கேட்டால் யார் வேண்டுமானாலும் இருக்கும் இடத்துக்கு வழிசொல்லுவார்கள் ,தற்போது சிறு மசூதி ஒன்று கட்டி அங்கு தன்னை தேடி வருபவர்களுக்கு மாந்திரிகம செய்து தருகிறார்கள்.
இவர்கள் இருவரும் குலழ்ந்தைகள் ஸ்பெசியளிச்ட் பிறந்த குலழ்ந்தை முதல் பெரியவர் வரை இங்கு கியூ தான் ஒரு சிறு காகிதத்தில் எதோ எழுதி குலழ்ந்தையின் பெற்றோரிடம் தந்து விடுகிறார்கள் இதற்கு கட்டணம் நாம்தருவது தான் இதில் என்ன ஆச்சர்யம் என்ன்றால் இவர்கள் வைதிரிகும் போர்டு தான் ஆம் பார்வை நேரம் காலை 9 மணி முதல் 2 மணி வரை. MBBS டாக்டரிடம் கூட இவ்வளவு கியூ கிடையாது, சுமார் 1000 பேர் இங்கு வந்து செல்கிறார்கள்.
தங்களிடம் வரும் வருமானத்தை வைத்து ஒரு பெரிய மசுதி கட்டிஉள்ளார்கள்பல V.I.P நாள்தோறும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர் V.I.P களுக்கு தனி கட்டணம் ஆம் தங்கள் நினைத்தகாரியத்தை இவர்கள் செய்தல் கேட்கும் தொகையை கொடுக்கவேண்டும்
குறிப்பாக: தியவேலைகலை செய்ய மாட்டார்கலாம்
இது எப்படி மனிதர்களுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இவர்களால் பல நமைகள் நடக்கிறது அதனால் இவர்களை பாராட்டுவோம், ஆனால் மாந்திர்கம் என்பது unmaiyae ?????????????

Sunday, April 12, 2009

மனநிலை பாதித்தவர்கள் சரணாலயம்

சில காலமாக சென்னையில் மனநிலை பாதித்தவர்கள் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள். அணைத்து சென்னை பிளாட்பாரத்திலும், சப்வே எனப்படும் சுரங்கபதைளும் இவர்கள் அதிகம் பேர் உறங்கிக்கொண்டு இருபார்கள்.
சில நாட்கள்ளுக்கு முன்னால் வந்த ஆனந்தவிகடனில் ஒரு செய்தி
சென்னை எல்லையோரங்களில் ஆந்திர, கர்நாடக, மற்றும் கேரளாவில் இருந்து லாரிகள் முலம் மனநிலை பதித்தவர்கள் கொண்டுவந்து இறகுவதாகவும், இதற்கு
காவல் துறை உதவி புரிகிறது என்றும் செய்தி வெளியானது. எப்படி இருபினும்
சில காலங்களில் சென்னை ஒரு மனநிலை பாதித்தவர்கள் சரணாலயமாக மாறும் ஆபாயம் உள்ளது. இதை அரசாங்கம் உடனே தடுத்தால் மட்டுமே சென்னை பிழைக்கும்

Tuesday, April 7, 2009

........சித்தர் மகிமை........

சில நாள்களுக்கு முன் நான் ஒரு பெரியவரை சந்திக்க நேர்ந்தது அவர் பெயர் மாணிக்கம், அவருக்கு சுமார் நூறு வயது இருக்கும் காது சரியாக கேட்கவில்லை,
அவரால் நடக்க இயலாது, அவரை எல்லோரும் சித்தர் என்று கூறுகிறார்கள்.
தினமும் காலையில் அவர் முன் சுமார் நாங்கு அல்லது இந்து நபர்கள் இருபார்கள்
அவர் தன் ஆணிந்துருகும் ஆடையிலே சிருநிரும், மலமும் கழிபார் என்று நினைக்கிறன், அவரை சுற்றி ஒரே துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் சுற்றியிருக்கும் மக்கள் யாரும் அதை சுத்தம் செய்ய நினைகவிலை, "அருள்மட்டும் வேண்டுமாம்". அவருக்கு காது கேளாது என்று தெரிந்தும் பல குறைகளை கேட்கும் சிலபேர் . அவர் இருக்கும் இடம் பார்த்தல் காற்றோட்டம் இலாத சிறு அரை அங்கு மின்விசிறி கூட இல்லை. தன் தாய், தந்தை அன்போடு பார்க்ககுட மனம் இலாத சிலர் அவரை தாதா தாதா என்று அன்போடு அழைக்கிறார்கல்.
அவர் உண்மையேல் யார் என்ற உண்மைகுட தெரிந்து கொள்ள யாருக்கும் விருப்பம் இல்லை. மாணிக்க சித்தர் இருக்கும் இடம் அருகில் இருபோர்குட அவரை பார்க்க வருவதில்லை. தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத மனிதரை சிலபேர் சித்தராகி ஆதாயம் அடைகிறார்கள்.

Monday, April 6, 2009

கொல்லிமலை அனுபவம்

கொல்லிமலை எத்தனை அழகான மலை எங்கு பார்த்தாலும் பசுமை, அதன் நடுவே சிறு குகைகள், இந்த குகைகள் விலங்குகள் வாழ்ந்தவை அல்ல மனிதர்கள் வாழ்ந்தவை ஆம் சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்த இடம் இது. இங்கு இருக்கும் இடங்களில் சில நெஞ்சை நெகிழ்ல செய்தது ஆம்,
அரப்பளீஸ்வரர் கோவில் இது மிகபலமையானது இதன் மலை அடிவாரதில் ஆகாயகங்கை நிர்விழ்சி உள்ளது இது சும்மார் 200 அடிகுமேல் இருந்து விழுவதால் நீரின் வேகம் சற்று வேகமாக இருக்கிறது, இங்கு நீர், பன்னிரில் பண்ணிர்கட்டிகள்
கலந்தது போல் குளுமையாகவும் ருசியாகவும் உள்ளது. இங்கு நீராடினால் புன்னியம்
என்கிறார்கள், இங்கு சென்று வர சுமார் 3 மணிநேரம் எடுக்கும் ,அனால் வயதானவர்கலும், இதய நோய் உள்ளவர்களும் செல்வது ஆபத்து, அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து நிர்விழ்சிக்கு செல்ல குறைந்த பட்சம் 4000 முதல் 5000 படிகட்டுகள் உள்ளன, இங்கு தான் அகத்தியர் வாழ்ந்த குகையும் அவர் வணக்கிய லிங்கமும் உள்ளது. கொல்லிமலை அனைவரும் பார்க்க வேண்டிய இடம்..
..........மீண்டும் இறை பயணம் தொடரும்.........

Wednesday, March 25, 2009

A Girl Can Change Ur GOAL…


கடவுளும் மனிதனும்

ஒரு சமயம் கடவுளிடம் இரெண்டு மனிதர்கள் தான் துன்பம் படுவதை பற்றி வேண்டினார்கள் அதற்கு கடவுள் குமரன் , செல்வன் என்று இரெண்டு மனிதர்களை பார்த்த கடவுள் அளவில் பெரியதான சிலுவைகளை சுமந்து செல்லுமாறு ஆணையிடுகிறார், பின் சிலுவையை சுமந்து மலைகளையும் காடுகளையும் கடந்து வரும் மனிதரில் ஒருவன், குமரன் கடவுளை பார்த்து தான் சுமந்து வரும் சிலுவை மிகுந்த எடை உள்ளதாகவும் தன்னால் சும்மக்க முடியவில்லை என்றும் வேண்டினான். பின் கடவுள் அவனிடம் மறுப்பு கூறாமல் ஒரு அரம் கொடுத்து வேண்டிய சுமையை குறைத்கொல்லுமாறு கூறினார்.
பின் அவன் அந்த அரத்தை பயன்படுத்தி சிலுவையீன் சில பகுதியை அகற்றினான் ஆனால் மற்றொருவன் (செல்வன்) ஏதும் கூறாமல் கடவுள் இட்ட பனி என்று செய்துவந்தான் .சில துரம் சென்ற பின் மிண்டும் தன்னால் சும்மக்க முடியவில்லை என்றும் வேண்டினான் குமரன் பின் கடவுள் அவனிடம் மறுப்பு கூறாமல் மீண்டும் அரம் கொடுத்து வேண்டிய சுமையை குறைத்கொல்லுமாறு கூறினார். ஆனால் செல்வன் தன் பயணத்தை தொடர்தான்
இப்படி இருவரும் பயணிக்க ஒரு மலை பிளவு தென்பட்டது பின் கடவுள் தோன்றி இந்த பிளவை கடந்தால் துன்பம் இல்லா சுகமான வாழ்கை அமையும் என்று கூறி மறைந்தார் உடனே செல்வன் தனிடம் இருந்த சிலுவையை மலை பிளவின் குறுக்கே செலுத்தி மலையை கடந்தான் ஆனால் குமாரனால் கடக்க முடியவில்லை என்னென்றால் தான் வைத்திருந்த சிலுவை மலையை கடக்க போதுமானதாக இல்லை என்பதை உணர்த்து முடங்கிணன்.
வாழ்கையில் வரும் துன்பத்தையும்,தோல்வியையும் கண்டு துவளாமல் பயணித்தல் அதுவே நாளைய வெற்றிக்கு பாலமாக அமையும் என்பதை உணர்த்தும் கதையே இது.









Thursday, March 19, 2009

Hi Viewer,

Please look out my message and post ur feedbacks

Thanks,

Sri